திருச்சி, அக்.12:இந்திய கம்யூனிஸ்ட் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் இந்திரஜித் விடுத்துள்ள அறிக்கை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், திடீரென உயர்த்தப்பட்டுள்ள 40 சதவீதம் உரம் விலை உயர்வை திரும்ப பெற கோரியும் மணப்பாறை நகரம், திருவெறு ம்பூர், வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி ஒன்றியம், லால்குடி நகரம், துறையூர், மண்ணச்சநல்லுார், உப்பிலியபுரம், முசிறி ஒன்றியம் உள்ளிட்ட 10 மையங்களில் வரும் 16ம் தேதி ஆர்ப்பாட்டமும், 17ம் தேதி மணப்பாறையில் பொதுக்கூட்டமும் நடை பெறுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.