காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் கொலு

காரைக்கால்,அக்.12: காரைக்கால் கைலாசநாதர் கோயில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து, அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பாரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. திருவாவடுதுறை ஆதீனத்தின் சுந்தமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்பு ஆராதனைகள் செய்து வழிபாட்டை தொடங்கி வைத்தார்.கொலு தர்பாரில் தனியாக தியாகராஜ சுவாமியும்,  சிவபெருமான் கைலாயத்தில் காட்சியளிப்பதுபோன்ற அமைப்பு உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏராளமான கொலு பொம்மைகள்  அலங்கரித்துவைக்கப்பட்டுள்ளன. வரும் 18ம் தேதி வரை கொலு தர்பார் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். தினமும் மாலை 6 முதல் 9 மணி வரை காணலாம். என சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: