பெண்ணிடம் 15 சவரன் பறிப்பு

அம்பத்தூர், அக். 12: சென்னை நந்தம்பாக்கம், ராமர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (52). மாநகர பஸ் டிரைவர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (46). அரிசி கடையை நடத்தி வருகிறார். வாரம் ஒருமுறை பாக்கியலட்சுமி செங்குன்றத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து, பாக்கியலட்சுமி மொபட்டில் தந்தையின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பாக்கியலட்சுமி வந்தபோது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த 2 பேர் வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவன் இறங்கி வந்து பாக்கியலட்சுமி கழுத்தில் கிடந்த 15 சவரன் செயினை பறித்துவிட்டு. இருவரும் பைக்கில் தப்பினர்.இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: