தொட்டியம், அக்.11: தொட்டியத்தில் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காகவும், மண்டலபூஜை நிறைவுவிழாவை முன்னிட்டும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொட்டியம் சிவாலயத்தில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் பூஜை நடைபெற்றது. இதன் நிறைவு பூஜையை முன்னிட்டு அனலாடீஸ்வரர், திரிபுரசுந்தரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகவேள்வி நடைபெற்றது. மேலும் 108 பசுக்களை வைத்து கோ பூஜையும், மூலவர் மற்றும் பிரகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.