புதுக்கோட்டை, அக்.11: அதிமுக அரசின் ஊழலை கண்டித்து புதுகையில் திமுகவினர் துண்டுபிரசுரம் வழங்கினர். அதிமுக அரசின் கலெக்சன் ஊழலை கண்டித்து திமுக தலைவர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு ஏற்ப திமுக இலக்கிய அணியின் செயலாளர் புலவர்.இந்திரகுமாரி அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இலக்கிய அணியின் சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான பெரியண்ணன் அரசு தலைமையில் கட்சியினர் புதிய பஸ் நிலையம் மற்றும் கடைவீதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். இந்நிகழ்வில் தலைமை இலக்கிய அணி துணைத்தலைவர் கவிதைப்பித்தன்,