மரக்கன்று நடும் நிகழ்ச்சி

வேதாரண்யம், அக்.11: வேதாரண்யம் தாலுகா, நாலுவேதபதி, புஷ்பவனம், செம்போடை, கள்ளிமேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் பாமக சார்பில் பனங்கொட்டை விதை நடுதல், மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைஞாயிறு பாமக கிழக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு துணைத்தலைவர் ஆனந்தராசன், ஒன்றிய துணைத்தலைவர் ராஜரத்தினம் அமைப்புச் செயலாளர் இளையராஜா அமைப்புத் தலைவர் கிருஷ்ணகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் விமல், அமைப்பு துணைத்தலைவர் செந்தில் உள்ளிட்ட ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: