செம்பனார்கோவில், அக்.11: செம்பனார்கோவில் அடுத்த ஆக்கூர் முக்கூட்டில் விசி கட்சி ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பூம்புகார் தொகுதி செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர்கள் பால்ராஜ், மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பொறுப்பாளர் மதி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் அறிவழகன், செய்தி தொடர்பாளர் தேவா ஆகியோர் பேசினர். தொடர்ந்து செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு, நல்லாடைரோடு, மேலப்பாதி ரோடு ஆகிய பகுதிகளில் வணிகர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட காத்தான்சாவடி குளத்தில் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.