திருவண்ணாமலை, அக்.4: திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காந்தி ஜெயந்தியையொட்டி, 150 மாணவிகள் காந்தி வேடம் அணிந்து அசத்தினர். திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி வரவேற்றார். விழாவில், மகாத்மா காந்தி போல வேடம் அணிந்த 150 மாணவிகள், மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஒரே சமயத்தில் 150 மாணவிகள் மகாத்மா காந்தி போல வேடம் அணிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.