டூவீலர்கள் நேருக்குநேர் மோதியதில் விவசாயி பலி

சேந்தமங்கலம், செப்.21: கொல்லிமலை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், படுகாயமடைந்த விவசாயி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கொல்லிமலை சித்தூர்நாடு நரியங்காடு பகுதியை சேர்ந்த  பழனிசாமி மகன் விவசாயி மீனாட்சி(27). இவர் நேற்று முன்தினம் இரவு  நரியங்காட்டில் இருந்து தனது டூவிலரில் முள்ளுக்குறிச்சிக்கு சென்றுள்ளார். கீழ்பூசணி வளைவு என்ற இடத்தில், எதிரே திருப்புளிநாடு பழச்சோலையை சேர்ந்த  சிவக்குமார்(24) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட  மீனாட்சி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு,  ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி உயிரிழந்தார்.  

மீனாட்சிக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். விபத்து குறித்து வாழவந்திநாடு  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: