ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 3 பவுன் நகை பறிப்பு

பரமத்திவேலூர், செப். 21: பரமத்திவேலூரில் வீட்டிற்கு நடந்த சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியையின் 3 பவுன் செயினை, டூவீலரில் வந்த மர்மநபர் பறித்துச்சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பரமத்திவேலூர்  சக்திநகரை சேர்ந்தவர் மல்லிகா(71). ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் நேற்று  முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று வீட்டு, மீண்டும்  வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர  வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர், ஆசிரியை மல்லிகாவை வழிமறித்து,  அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு  தப்பிச்சென்றான். இதுகுறித்து மல்லிகா பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல்  தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி ராஜூ மற்றும்  போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், நகையை பறித்துச்சென்ற மர்மநபர்  குறித்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: