செங்குந்தர் பொறியியல் கல்லூரி மாணவிக்கு அப்துல்கலாம் விருது

திருச்செங்கோடு,  செப்.21: இந்திய பொறியாளர் அமைப்பு, சேலம் உள்ளூர் மையம் சார்பாக,  பொறியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் “பொறியாளர் தினவிழா” சேலம் சென்னீஸ்  ஹோட்டலில் நடைபெற்றது. ஆண்டுதோறும் பல விருதுகளை மாணவர்களின் படிப்பு  மட்டுமில்லாமல், அவர்களின் தனித்திறன் மற்றும் தகுதிகளின் அடிப்படையில்  தேர்வு செய்து வழங்கி வருகிறது.

அதன்படி திருசெங்கோடு செங்குந்தர்  பொறியியல் கல்லுரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை இறுதி ஆண்டு  மாணவி ஐஸ்வர்யாவுக்கு,   பொறியாளர் தின விழாவை முன்னிட்டு, 2018ம் ஆண்டின்  சிறந்த பொறியாளர் மாணவியாக தேர்வு செய்யப்பட்டு டாக்டர் அப்துல்கலாம்  விருது வழங்கப்பட்டது.

விருது பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த  மாணவியை, செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன்,  தாளாளர் மற்றும் செயலாளர் பேராசிரியர் பாலதண்டபாணி, கல்லூரியின் முதல்வர்  வெங்கடேஷ், முதன்மை நிர்வாக அதிகாரி மதன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி  துறை இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு, பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

Related Stories: