ஆல் இந்தியா மஜிலிசே இத்யாதுல் முஸ்லிம் கட்சியினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி, செப்.21: கிருஷ்ணகிரியில் ஆல் இந்தியா மஜிலிசே இத்யாதுல் முஸ்லிம் கட்சியினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், ஆல் இந்தியா மஜிலிசே இத்யாதுல் முஸ்லிம் கட்சியினர், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அக்கட்சியின் மாவட்ட தலைவர் உபேத் தலைமையில் 50 பேர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., முன்னிலையில் இணைந்தனர். அவர்களை மாவட்ட திமுக பொறுப்பாளர், சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியினை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அஸ்லம் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், சுப்பிரமணி, காவேரிப்பட்டணம் பேரூர் செயலாளர் பாபு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் அமீன், திருமலைச்செல்வன், ரியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கராமத் நன்றி கூறினார்.

Related Stories: