ஓசூர், செப்.21: ஓசூரில், பிரதமர் நரேந்திரமோடியின் 68வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.காந்தி சிலை அருகில் பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முனிராஜ், மாவட்ட துணைத்தலைவர் போத்திராஜ், வழக்கறிஞர் பிரிவு கோட்ட பொறுப்பாளர் விஜய்குமார், அம்மன் சுரேஷ், மஞ்சு, பிரவின்குமார், இளைஞரணி நகர தலைவர் முருகன், முனிரெட்டி, மஞ்சுநாத், உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக வரசித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர்.