திருச்சி, செப்.21: பொன்மலை ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக முன்பதிவு டிக்கெட் மையம் ஒரு கவுன்டரில் இயங்கி வந்தது. இந்நிலையில் பொன்மலை ரயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் மையம் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மூடப்பட்டது. அதன்பிறகு திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொன்மலை பகுதியை சேர்ந்தவர்கள் முன்பதிவு மற்றும் தட்கல் டிக்கெட் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மூடப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.