ஏஐடியூசி சார்பில் கிருஷ்ணகிரியில் பிரசார இயக்கம்

கிருஷ்ணகிரி, செப்.19:  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியூசி சார்பில் “அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்-இந்தியாவை பாதுகாப்போம்” என்பதை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார இயக்கத்தில், நிர்வாகிகள் திரளாக பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏஐடியூசியும் இணைந்து, “அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்-இந்தியாவை பாதுகாப்போம்” என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் வேலூரில் பிரசார இயக்கத்தை துவங்கியது. நேற்று காலை பர்கூரிலும், பிற்பகல் கிருஷ்ணகிரி பழையபேட்டையிலும் இந்த பிரசாரம் நடந்தது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசாரத்திற்கு முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மாதையன் கோரிக்கை குறித்து பேசினார்.  பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காத மோடி அரசு பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இந்த போராட்டத்தில் மாநில துணை செயலாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன், விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், மாநில துணைத்தலைவர் தேவதாஸ், தேசிய குழு உறுப்பினர் சேதுராமன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, சிவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: