நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்

நெல்லை, செப். 19: நெல்லை தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சுஷ்மிதா (23), தென்காசியில் இயங்கும் தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 14ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவே இல்லை. இதையடுத்து தோழிகள், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில், தாழையூத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

 இந்நிலையில், மாயமான சுஷ்மிதா நேற்று தனது காதலனுடன் நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் நடத்திய விசாரணையில் இவரும், சிவந்திபட்டியைச் சேர்ந்த கோட்டையப்பன் (28) என்ற வாலிபரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்தனர் என்பது தெரியவந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 இதன்காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதும், பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் தாழையூத்து போலீஸ் நிலையத்திற்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர். விசாரணை நடத்திய தாழையூத்து போலீசாரிடம், இருவரும் தாங்கள் மேஜர் என்பதால் திருமணம் செய்துகொண்டதாக கூறியதை அடுத்து இருவரையும் அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: