சென்னை, செப். 19: காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த உள்ள கிராமத்தை சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு ஒரு மகன், குமுதா (16) என்ற பிள்ளைகள் உள்ளனர். (அனைவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளன). சிறுமி குமுதா மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குமரன், கனகாவை பிரிந்து சென்றார். பின்னர் கனகா, கூலி வேலை ெசய்து, பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமி குமுதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது, அவள் 5 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.