பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்க ஆண்டு விழா

பெரம்பலூர்,செப்.18: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 18வது ஆண்டு தொடக்க விழா மற்றும் சங்க கொடியேற்று விழா நடந்தது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 18வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சங்க கொடியேற்று விழா மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் பெரம்பலூரில் நேற்று நடந்தது. பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தயாளன் ஏற்றி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமரி அனந்தன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க மாநிலசெயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றினார்கள்.

நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பாக தூய்மை பணிகள் நடைபெற்றது. இதனை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பாரதி வளவன் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: