புதுக்கோட்டை, செப்.12: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரபேல் போர் விமானத்தில் பல ஆயிரம் கோடிகள் ஊழல் நடந்தது குறித்து முறையான நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காங்கிரசார் ஊர்வலமாக வந்து புதுகை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நிகழ்ச்சிக்கு புதுகை வடக்கு, தெற்கு மாவட்ட தலைவர்கள் முருகேசன், தர்மதங்கவேலு ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் நகர்மன்ற தலைவர் திவ்யநாதன், வக்கீல் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தின்போது மத்திய பாஜக அரசு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டைக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரம் வரை அவர் வரவில்லை.