ஜெயங்கொண்டம்,செப்.5: தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் பெண்கள் இளைஞர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டெடுக்க விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் மற்றும் மேற்பார்வையாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கன்வாடி பணியாளர்களின் உணவுப் பொருட்கள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது கண்காட்சி மற்றும் பேரணியை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை கஸ்தூரி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகள் இளைஞர்கள் பெண்கள் ஆகியோரை காப்போம் என உறுதிமொழி அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.