அரியலூர்.ஆக,21: அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை வரும் 24ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் விஜயலட்சுமி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.