மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் வாலிபர் கைது

அரியலூர்,ஆக.15: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் நேற்று விக்கிரமங்கலம்-கடம்பூர் சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்ததில் மழவராயநல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரமேஷ்(23) என்பவர் மருதையாற்று படுகை பகுதிகளில்  இருந்து விக்கிரமங்கலம் பகுதிகளுக்கு அரசு அனுமதியின்றி  மணல் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: