அரியலூர், ஆக. 13: அரியலூர் வாரணவாசியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் சமுதாயகூடம் பாழடைந்து சமூக விரோத செயல் இடமாக மாறியுள்ளது. அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் அமைந்துள்ளது சமத்துவபுரம். இது 1999ல் கட்டப்பட்டது. சமத்துவபுர மக்கள் பயன்பாட்டிற்காக சமுதாயகூடம் ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இச்சமுதாய கூடத்தில் மேற்கூரை இடிந்து, மாடிப்படிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் உட்புறம் எப்போது விழும் என்று தெரியாமால் தொங்கி கொண்டிருக்கிறது. சமுதாயகூடம் கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது.