குலமாணிக்கத்தில் இன்று சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர், ஜூலை 20: அரியலூர் வட்டத்தில் குலமாணிக்கத்தில் சிறப்பு குறைதீர் முகாம் இன்று நடக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 6வது கட்டமாக அரியலூர், உடையார்பாளையம் வட்டங்களில் தலா 2 கிராமங்கள், செந்துறை, ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறைதீர் முகாம் இன்று நடக்கிறது. அதன்படி  அரியலூர் வட்டத்தில் பார்ப்பனச்சேரி, குலமாணிக்கம் (மேற்கு) கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் கடம்பூர், காரைக்குறிச்சியில் குறைதீர் முகாம் நடக்கிறது.

செந்துறை வட்டத்தில் மருவத்தூர், ஆண்டிமடம் வட்டத்தில் சிலம்பூர் (தெற்கு) கிராமத்திலும் முகாம் நடக்கிறது. முகாமில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள்,  பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர்  விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: