வாஷிங்டன்: நாட்டின் 75வது சுதந்திர நிறைவு தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதேபோல், மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.