தமிழகம் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் புராதான சிற்பங்கள் ஆவணப்படுத்திட ஹெலிகேம் மூலம் படம் எடுக்கும் பணி Jul 25, 2021 ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் திருச்சி: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயிலில் புராதான சிற்பங்களை ஆவணப்படுத்திட ஹெலிகேம் மூலம் படம் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தமிழகத்திலுள்ள மிகப்பெரிய கோயில்களில் உள்ள புராதான சிற்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புராதான சிற்பங்கள் குறித்து ஆவணப்படம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முதலில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் உள்ள புராதான சிற்பங்களை ஹெலிகேம் கேமரா மூலம் படம் பிடித்து வருகின்றனர். தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக கோயிலிலுள்ள அனைத்து இடங்களையும் படம் பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்தூண் செதுக்கப்பட்டுள்ள புடை சிற்பங்களையும் புகைப்படம் எடுத்து வருகின்றனர். தற்போது கோயிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபங்களில் உள்ள சிற்பங்களை படம் பிடிப்பதற்காக தூய்மைபடுத்தியுள்ளனர். இதையடுத்து நேற்று அங்கு இருக்கும் ஒவ்வொரு தூண்களிலும் அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்களை படம் பிடிக்கும் பணி நடைபெற்றது.
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது: வானிலை மையம்!
மேற்படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல : உயர்நீதிமன்றம்
இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்
சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் மாநகர பேருந்துகள் நிற்கவில்லை என்றால் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் : போக்குவரத்துத் துறை
உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய பொய்யன்.. இஸ்லாமியர் குறித்து பிரதமரின் பேச்சு தரம் தாழ்ந்தது: ஜெயக்குமார் விமர்சனம்!!
இந்தாண்டில் முதல்முறையாக தமிழகத்தில் அதிக மாவட்டங்களுக்கு ஒரேநேரத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!!
எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?: ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் ஆணை
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர மோடியைப் போல் யாரும் தரங்கெட்ட செயலில் ஈடுபட்டதில்லை: ஜவாஹிருல்லா தாக்கு