சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா கோபிநத்தம் அடுத்து தரேகட்டு வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் சட்டவிரோதமாக நுழைந்து நாட்டு துப்பாக்கி மூலம் மான் வேட்டையாடி அதன் இறைச்சியை பைக்கில் எடுத்து செல்ல முயற்சித்து வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பைக்கில் வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக வந்தார். இவரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது 25 கிலோ மான் இறைச்சி இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.