நெல்லை அருகே வீடு புகுந்து பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் கொடூர கொலை: தலையை வெட்டி கால்வாயில் வீசியதால் பதற்றம்

நாங்குநேரி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வீடு புகுந்து 2 பெண்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.  நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி, மாடன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி சண்முகத்தாய் (50). இவர்களது மகன் நம்பிராஜன் (21). இவரும், இதே பகுதி கீழத்தெருவை சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதியும் (18) கடந்த ஆண்டு அக்டோபரில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பெண் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நெல்லை டவுன் வயல் தெருவில் தனி வீடு எடுத்து தம்பதியர் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் 25ம் தேதி இரவு வான்மதியின் உறவினர்கள், நம்பிராஜனை மது குடிக்க அழைத்துச் சென்று கொலை செய்தனர். இதுதொடர்பாக வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி, உறவினர்கள் முத்துப்பாண்டி, செல்லத்துரை, முருகன், விஸ்வநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நம்பிராஜனை கொலை செய்த செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் (52) நாங்குநேரி அண்ணா சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார். அவரையும், உதவியாக இருந்த உறவினர் சொரிமுத்து மகன் சுரேஷ் (20) என்பவரையும் கடந்த மார்ச் 14ம் தேதி நம்பிராஜன் தரப்பினர் பழிக்குப்பழியாக  கொலை செய்தனர். இதுதொடர்பாக நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய், தந்தை அருணாசலம், அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கிபாண்டி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அனைவரும் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர்.  இதனிடையே நேற்று மதியம் மறுகால்குறிச்சிக்கு பைக்கில் வந்த 12 பேர் கொண்ட கும்பல், பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள இசக்கிபாண்டி வீட்டின் மீது வெடிகுண்டு வீசியது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அவரது தாய் சாந்தி (40) வெளியே வர முயன்றார்.

அப்போது திபுதிபுவென வீட்டுக்குள் புகுந்த அந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் அவர் உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய் வீட்டுக்கு சென்று அவரது வீட்டின் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. உடனே சண்முகத்தாயும், அவரது கணவர் அருணாசலமும் பின் வாசல் வழியாக தப்பி ஓடினர்.  பக்கத்து வீட்டு குளியலறைக்குள் ெசன்று சண்முகத்தாய் ஒளிந்து கொண்டார். இருப்பினும் வெறிகொண்டு நுழைந்த கும்பல், குளியலறை மீது வெடிகுண்டை வீசியது. இதில் கதவு உடைந்து உள்ளே இருந்த சண்முகத்தாயின் உடல் சிதறியது. இருப்பினும் வெறி அடங்காமல் கும்பல் அவரது தலையை வெட்டி எடுத்து  தெருவோர கழிவுநீர் கால்வாயில் வீசிச்சென்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.  தகவலறிந்து நெல்லை எஸ்பி மணிவண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

தொடர் கொலைகள்

நாங்குநேரி பகுதியில் சமீபகாலமாக அரிவாள் வெட்டு மற்றும் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. நம்பிராஜன் கொலையை அடுத்து இருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது வீட்டில் இருந்த பெண்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

நடிகர்கள், நடிகைகள் பீதி

தீபிகா படுகோனின் மானேஜர் கரிஷ்மா அளித்த தகவலின் பேரில்–்தான், தீபிகா உள்ளிட்ட மூன்று நடிகைகளும் போதை தடுப்பு பிரிவின் விசாரணை வளையத்துக்குள் சிக்கி இருக்கின்றனர். அதேபோல், தீபிகா, ஷரத்தா, சாரா அலிகானிடம் நேற்று பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதால், அவர்கள் மேலும் பல நடிகர், நடிகைகளின் பெயர்களை அதிகாரிகளிடம் கூறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால், இவர்களுடன் சேர்ந்து போதை பார்ட்டிகளில் பங்கேற்ற மற்ற நடிகைகள், நடிகர்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories: