மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டத்தை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி இன்ஸ்டாகிராம் உரையாடலில் பேசுகையில், இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கூறினார். அப்படி செய்தால் எந்தவொரு தேர்வாளர் எந்த வீரரின் பெயரை எந்த காரணத்துக்காக தேர்வு செய்கிறார் என்பதை எல்லோரும் பார்க்க முடியும் என குறிப்பிட்டார்.