சிறுவன் கைது

பெரம்பூர்: ராயபுரத்தில் 4 வயது சிறுவனுக்கு இயற்கைக்கு மாறான பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் 37 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு 10 வயதில் மகன் உள்ளார். சிறுவன், தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று முன்தினம் 10  வயது சிறுவனை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று, இயற்கைக்கு முரணாக பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

வீட்டிற்கு வந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளான். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் வடக்கு கடற்கரை போலீசில் புகார் கொடுத்தார்.புகரின்பேரில் போலீசார் சிறுவனை அழைத்து விசாரித்தபோது 17 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. எனவே போலீசார் போக்சோ சட்டத்தில் சிறுவனை கைது செய்து கெல்லீஸ் சீர்த்திருத்த பள்ளியில்  சேர்த்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: