பெரம்பூர்: ராயபுரத்தில் 4 வயது சிறுவனுக்கு இயற்கைக்கு மாறான பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் 37 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு 10 வயதில் மகன் உள்ளார். சிறுவன், தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று முன்தினம் 10 வயது சிறுவனை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று, இயற்கைக்கு முரணாக பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.