பெரு நாட்டில் கனமழை சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு

பெரு நாட்டில் மீண்டும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது.

அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ரூஜில்லோ என்ற இடத்தில் கடந்த சில தினங்களில் கனமழை பெய்ததால் பல்வேறு நகரங்கள் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மலை பகுதியில் பெய்த மழை காரணமாக மார்டேடி டியாஸ் என்ற இடத்தில் மிகப் பெரிய அளவில்  நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை போக்குவரத்து முற்றிலும்  துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளமும் நிலச்சரிவு மேலும் தொடரும் என்பதால் பொது மக்கள் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: