மொஹாலி: ‘ஆஸ்திரேலியாவுடனான தொடரை இழந்ததால், இந்திய வீரர்களுக்கு உலக கோப்பைையை எதிர்க்கொள்ள பயமில்லை‘ என்று கேப்டன் விராத் கோஹ்லி தெம்பாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுடனான டி20, ஒரு நாள் போட்டித் தொடர்களை இந்தியா இழந்துள்ளது. உலக கோப்பை போட்டி நெருங்கி வரும் நிலையில் இந்தியா தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் தோற்றிருப்பது லேசான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து இந்திய அணியன் கேப்டன் விராத் கோஹ்லி கூறியதாவது: கடைசி 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயம் ஆஸ்திரேலியாவுக்கு இருந்தது. அதனை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த தோல்வியால் இந்திய வீரர்கள் யாருக்கும் உலக கோப்பையை எதிர்கொள்வதில் எந்த பயமில்லை. போட்டி முடிந்து அறைக்கு திரும்பிய பிறகு வீரர்கள் மட்டுமல்ல, அணியில் உள்ள நிர்வாகிகளும் தெம்பாகவே இருந்தோம்.