சென்னை: துபாயில் இருந்து மிக்சி, எடை மெஷினில் மறைத்து ₹18 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த 2 கேரள வாலிபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கேரள மாநிலத்தை சேர்ந்த குத்தூஸ் (29), ஹைதுரூஸ் (32) ஆகியோர் சுற்றுலா விசாவில் துபாய்க்கு சென்று விட்டு திரும்பினர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.