சாண்டியகோ: சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 பேர் மாரடைப்பால் இறந்தனர்.உலகளவில் பூகம்பத்தால் அதிகம் பாதிக்கக் கூடிய நாடுகள் பட்டியலில் சிலியும் உள்ளது. இந்நாட்டில் நிலநடுக்கமும், எரிமலைகள் வெடிப்பதும் அடிக்கடி நடக்கும். இந்நிலையில், இந்நாட்டில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டேர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. கோகியும்போவில் இருந்து தெற்மேற்கே 15 கிமீ தொலைவில் 53 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. வால்பாரைஸ்கோ, ஹிக்கின்ஸ் மற்றும் தலைநகரான சாண்டியகோ பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கின.