மின்சாரம் திருட்டு 3 லட்சம் அபராதம்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அமலாக்க அதிகாரிகள், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 4 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 2,78,838 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க சமரச தொகை 24,000 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை 94458 57591 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: