புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 120 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டின் உரிமையாளர் நூர்தீன் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த நூர்தீன் திருச்சி சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை கொள்ளை நடந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்த 120 சவரன் நகை,ரூ.30 ஆயிரம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.