நியூபெர்ன்: அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்திய புளோரன்ஸ் புயல் வலுவிழந்தது. அட்லாண்டிக் கடலில் உருவான தீவிரமான புளோரன்ஸ் புயல், அமெரிக்காவின் வடக்கு, தெற்கு கரோலினா மாகாணங்களை தாக்கியதால் வெள்ளக் காடானது. புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள், வீடுகளில் மின்சாரம் இன்றி இருளில் தவித்தனர். பல இடங்களில் மழைநீர் பல உயரம் ஓடியது. இந்த மழை வெள்ளத்தால் நடந்த பல்வேறு விபத்துகளில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியேற முடியாமல் தத்தளித்த ஆயிரக்கணக்கான மக்களை மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிவிட்டர் மூலம் அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.