ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

 

தஞ்சாவூர், ஏப்.20:ஒரத்தநாடு அருகே பின்னையூர் கணக்கன் தெருவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கணக்கன் தெருவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ராஜா மடம் வாய்க்காலை கடந்து செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் .

மேலும் ஆபத்தான முறையில் பாலத்தை கடந்து செல்ல வேண்டி உள்ளதாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது வரை பாலம் அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந் நிலையில் பின்னையூரை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தொடர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் ஆதார் அட்டை ,வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைக்க போவதாக அறிவித்துள்ளனர்.

The post ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: