வேலைக்கு சென்ற பெண் விஏஓ மாயம்

பரமத்தி வேலூர்: பரமத்திவேலூர் அருகே வேலைக்கு சென்ற பெண் விஏஓ திடீரென மாயமானார். அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு கூறி அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், பெரியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி லதா. இவர், கீரம்பூர் அடுத்துள்ள திண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல், வேலைக்கு வந்துள்ளார். அலுவலகத்தில் சிறிது நேரம் இருந்த அவர், இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை அங்கே விட்டு விட்டு, திடீரென மாயமானார். நீண்ட நேரமாகியும் அவர் அலுவலகத்துக்கு திரும்பாததால், அங்கிருந்தவர்கள் பூபதியை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், லதா வீட்டிற்கும் செல்லாதது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது கணவர் பூபதி பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மனைவியை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண் விஏஓ திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வேலைக்கு சென்ற பெண் விஏஓ மாயம் appeared first on Dinakaran.

Related Stories: