வேலூரில் ஷேர் ஆட்டோவில் கடத்தி பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் : சிறையில் உள்ள 4 பேர் மீது குண்டாஸ்!!

வேலூர் : வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த மாதம் தனது ஆண் நண்பருடன் இரவு காட்சி பார்த்துவிட்டு வேலூர் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தனது இருப்பிடம் திரும்புவதற்காக அங்குள்ள ஷேர் ஆட்டோவில் நள்ளிரவில் ஏறினார். அதில் ஏற்கனவே 4 பேர் இருந்துள்ளனர். கலெக்டர் அலுவலகம் முன்பாக பாலாற்றங்கரை செல்லும் சாலை வழியாக ஆட்டோவை திருப்பியபோது, அப்பெண் மீண்டும் ஆட்டோ டிரைவரிடம் தவறான வழியில் சென்றதை கேட்டார். உடனடியாக ஆட்டோவில் வந்தவர்கள் அப்பெண்ணுடன் வந்த ஆண் நண்பரை அடித்து மிரட்டி சாலையில் இறக்கிவிட்டு பாலாற்றங்கரையோரம் அப்பெண்ணை மிரட்டி ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.அங்குள்ள பார் அருகே வைத்து ஆட்டோவில் வந்த 4 பேரில் 3 பேர் தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு அப்பெண்ணை விரட்டியுள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் மணிகண்டன், சந்தோஷ், பார்த்திபன், பரத், மற்றும் 15 வயது சிறுவன் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு நிலையில், 4 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மீதம் உள்ள ஒருவர் சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் பரிந்துரையின் பேரில் சிறையில் உள்ள நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். …

The post வேலூரில் ஷேர் ஆட்டோவில் கடத்தி பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் : சிறையில் உள்ள 4 பேர் மீது குண்டாஸ்!! appeared first on Dinakaran.

Related Stories: