விவசாயி வீட்டில் கொள்ளை

பொன்னேரி: திருவேங்கடாபுரம் கிராமத்தில் பொன்னியம்மன் நகர் 4வது குறுக்கு தெருவில் வசிப்பவர் முரளி. விவசாயி. இவர், சென்னையில் உள்ள தமது மகனின் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் வீட்டின் கதவு பூட்டாமல் வெளிப்புறமாக தாழிடப்பட்டிருப்பதாக அருகில் இருப்பவர்கள் முரளிக்கு தகவல் கொடுத்தனர். முரளி, அவசர அவசரமாக வந்து பார்த்தபோது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைந்திருந்த ₹20,000 கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவுசெய்து அப்பகுதி கணாணிப்பு கேமர உதவியுடன் கொள்ளையர்களை தேடுகின்றனர்….

The post விவசாயி வீட்டில் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: