விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பரங்குன்றம், செப். 11: திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் வட்டார விவசாயிகள் குறைதீர்க்குள் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. தாசில்தார் கவிதா தலைமை வகித்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் புவனேஸ்வரி மற்றும் தோட்டக்கலை, வேளாண்மை, பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் விவசாயிகள், பருவமழை காலம் நெருங்கி வருவதால் கண்மாய்களுக்கு செல்லும் நீர் வரத்து காலவாய்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் பதிலளித்து பேசுகையில், ‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

The post விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: