விசிக ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, பிப். 25: சிவகங்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மின்னணு வாக்கு இயந்திரங்களை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்னணு வாக்கு இயந்திரங்களை தடை செய்ய வேண்டும், மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்து வெற்றி பெற நினைக்கும் பாஜவிற்கு தேர்தல் ஆணையம் துணை போகக்கூடாது, வாக்குச்சீட்டுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் பாலையா தலைமை வகித்தார். மண்டல துணைச் செயலாளர் முத்துராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் அர்ஜூன், பாஸ்கரன், ஒன்றியசெயலார்கள் ராமதாஸ், கார்த்திக், கண்ணன், ஜேம்ஸ்வளவன், காளிதாஸ், சதீஷ்வளவன்,கிருஷ்ணமூர்த்தி, மாணிக்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: