வாலிபர் கொலையில் மேலும் 3 பேர் கைது: மூவருக்கு வலை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில், மீனவ வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை, போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை, வலைவீசி தேடி வருகின்றனர்.மாமல்லபுரம் மீனவ குப்பத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் மணிமாறன் (எ) அசோக் (26). மீனவர். கடந்த 10ம் தேதி அதிகாலையில் மணிமாறன், வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் தனிப்படை அமைத்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இதையொட்டி, கடந்த வாரம் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 6 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரே பைக்கில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை மறித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குபின் பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரித்தனர்.அதில் பெரும்பாக்கத்தை சேர்ந்த புருஷோத்தமன் (எ) காந்தி (21), சாகுல்ஆமீது, தர் என தெரிந்தது. மேலும் விசாரணையில், மாமல்லபுரம் மீனவ வாலிபர் கொலையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்….

The post வாலிபர் கொலையில் மேலும் 3 பேர் கைது: மூவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: