ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு

மதுரை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தரப்பு தகவல் அளித்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவிவரும் சூழலில் பரோல் வழங்க இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால் தற்போதைய சூழலில் ரவிச்சந்திரனுக்கு பாதுகாப்பு வழங்குவது இயலாது என்று அரசு தரப்பு கைவிரித்துள்ளது. ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் வழங்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி மனுதாக்கல் செய்திருந்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது….

The post ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: