முன்னாள் படைவீரர் நல அலுவலக தகவல்

விருதுநகர், ஜூலை 10: திருவில்லிபுத்தூர் முன்னாள் படைவீரர் நல அலுவலக செய்தி குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் மனைவி, முன்னாள் படைவீரர் விதவை மற்றும் படைவீரர்களின் திருமணமாகாத மகள்கள், மத்திய, மாநில மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று, நிறுவனத்தின் மூலம் தையல் இயந்திரம் பெறாதவர்கள் ஜூலை 25க்குள் தையல் பயிற்சி முடித்த சான்றுகளுடன் வில்லிபுத்தூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் படைவீரர் நல அலுவலக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: