முந்திரி தோப்புக்கு தூக்கிச்சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

தஞ்சை: தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஏப்ரல் 11ம் தேதி இரவு பணியை முடித்து விட்டு, ஊருக்கு செல்ல பஸ்சிற்காக புதிய பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார். அப்போது அந்த பெண்ணுடன் பள்ளியில் ஒன்றாக படித்த குருங்குளம் மேற்கு மேட்டுப்பட்டியை சேர்ந்த கொடியரசன்(22), என்பவர் அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக டூவீலரில் அழைத்துச் வந்து முந்திரி தோப்பிற்குள் தூக்கி சென்று, நண்பர்கள் மேட்டுப்பட்டி சாமிநாதன்(30), சுகுமாறன்(23), கண்ணன்(31) ஆகியோருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தார். இந்த வழக்கில் தொடர்புடைய கொடியரசன் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தஞ்சை எஸ்.பி., ரவளிப்ரியா பரிந்துரையின் பேரிலும் வல்லம் டிஎஸ்பி., பிருந்தா தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் கொடியரசன் உட்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதற்கான நகலை போலீசார் சிறையில் உள்ள 4 பேரிடமும் வழங்கினர். இதேபோல் கள்ளச்சாராய வியாபாரிகள் சண்முகம்(26), விஜயக்குமார்(35) ஆகியோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். …

The post முந்திரி தோப்புக்கு தூக்கிச்சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: