மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம்..  நடந்தது. இதில்,  மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக இயற்றப்பட்டது.  மீன்வளத்துறை சார்பில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்து மீன்வளத் துறை உதவி இயக்குனர் வேலன் விரிவாக எடுத்துரைத்தார். அதேபோன்று, விவசாயத்துறை உள்ளிட்ட துறையிலிருந்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் மீஞ்சூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்செல்வி பூமிநாதன் ஒன்றிய கவுன்சிலர்கள் பானுபிரசாத், சகாதேவன் கதிரவன், சுமித்ரா குமார், வெற்றி, செல்வழகி எர்ணாவூரான், கிருஷ்ண பிரியா வினோத், ரமேஷ். ராஜா, காண்டீபன் எம்.கே.தமின்சா, சங்கீதா அன்பழகன், மகாலட்சுமி பிரகாஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்….

The post மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: