மஞ்சூர் பகுதியில் பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி-சுற்றுலா பயணிகள் ரசிப்பு

மஞ்சூர் : மஞ்சூர் சாலையோரங்களில் பூத்துள்ள காட்டு சூரியகாந்தி மலர்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. நீலகிரி  மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் ஏற்கனவே  ரெட்லீப், பாட்டில்பிரஷ் உள்ளிட்ட பலவகையிலான வண்ண மலர்கள் பூத்துள்ளது. தற்போது  மஞ்சள், சந்தனம் மற்றும் வௌ்ளை நிறங்களில் காட்டு சூரியகாந்தி மலர்கள் ஏராளமாக பூத்து குலுங்குகின்றன. ‘ஹீலியன்ந்தாஸ் டெபீலிஸ்’ என்ற தாவர வகையை  சேர்ந்த இம்மலர்கள் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை கொண்டது.செடிகளில்  கொத்து, கொத்தாக பூத்துள்ள இம்மலர்கள் மஞ்சூர் சுற்றுப்புறங்களில் உள்ள  சுற்றுலாதலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது.  இம்மலர்களின் அருகில் நின்று செல்பி எடுப்பதிலும் பயணிகள் பெரும் ஆர்வம்  காட்டுகின்றனர். …

The post மஞ்சூர் பகுதியில் பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி-சுற்றுலா பயணிகள் ரசிப்பு appeared first on Dinakaran.

Related Stories: