கடலூர், ஏப். 4: கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தீவிர சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர். இதில் கடலூர் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்ததாக ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post போதை பொருள் விற்பனை
கடலூர் மாவட்டத்தில்